நான்

நான் நிறைய அவமானங்களையும்
அசிங்கங்களை சந்தித்திருக்கிறேன்.
அவற்றை சந்திப்பதே ஒரு கொடுமையான தருணங்கள்தான்,
அப்படியிருந்த நான்
ஏன் இதெல்லாம் எனக்கு நடந்தது,
நான் நேர்மையானவன் தானே என புலம்பியதுண்டு.
அதன் மறைபொருள் என்னவென்றால்,
எனக்கு நேர்மை என்னும்
பொய்யான எண்ணத்திலிருந்து
உண்மை என்னும் விடியலை நோக்கிச்செல்லவே,
நான் என் வாழ்நாளில்,,,

இவன் உண்மையானவன் என்ற திமிர் மட்டும் போதுமென விருப்பம் கொண்டேன்.

அதுவே என் நடைமுறை நோக்கமாக
மாற்றிக்கொண்ட பிறகுதான்,
போன மானம் மூன்று மடங்காக திரும்பி வந்தது.
ஏன் போகணும் ஏன் வரணும்
என ஒரு சிலர் நினைக்கலாம்.
ஆனால் காலம் யாரை எப்படி புரட்டிப்போடும்
என சொல்லவே முடியாது.
அப்படித்தான் நானும் தத்தளித்தேன் என் வாழ்வில்!

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started